கருணாநிதி நினைவிடத்தில் ஒலி, ஒளி காட்சிகளுக்கு தடைவிதிக்கக் கோரி - அதிமுக மனு

by Staff / 31-03-2024 04:27:19pm
கருணாநிதி நினைவிடத்தில் ஒலி, ஒளி காட்சிகளுக்கு தடைவிதிக்கக் கோரி - அதிமுக மனு

சென்னையில் அமைத்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஒளி ஒலி காட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக கருணாநிதி நினைவிடத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் விதமாக காட்சி அரங்கத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒலி, ஒளி காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. அந்த ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். காணொளி அரங்கத்தை மூடி முத்திரை இட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via