ஆன்லைன் ரம்மியால் பொறியாளர் தற்கொலை - அன்புமணி கண்டனம்

by Staff / 01-04-2024 11:45:05am
ஆன்லைன் ரம்மியால் பொறியாளர் தற்கொலை - அன்புமணி கண்டனம்

சென்னை பெருங்குடியில் பொறியாளர் குருராஜன் என்பவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்ரல் 1) தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via