விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தரலாம்
தமிழகத்தில் ஏப்ரல் 19, தேர்தல் நாளில் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை தொழிலாளர் இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தொழிலாளர்கள், கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
Tags :