பாஜக நிர்வாகி வீட்டில் பறக்கும் படை சோதனை

by Staff / 17-04-2024 05:03:14pm
பாஜக நிர்வாகி வீட்டில் பறக்கும் படை சோதனை

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் உள்ள பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கே.ஆர்.வெங்கடேஷ் வீட்டில் இன்றுதேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், பலரும் ஓட்டுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாஜக நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via