காஸாவில் 24 மணி நேரத்தில் 40 பேர் பலி

by Staff / 18-04-2024 11:27:34am
காஸாவில் 24 மணி நேரத்தில் 40 பேர் பலி

காசாவில் இனப்படுகொலைக்கு மத்தியிர் இஸ்ரேல், நுசைராத், மகசி மற்றும் யாப்னா அகதிகள் முகாம்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தியது. 24 மணி நேரத்தில் 40 பேர் பலியாகியுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஃபாவில் உள்ள அல்மகாசி முகாமில் குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்ட நிலையில், நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் மற்றொரு முகாம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தனர். இதற்கிடையில், வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் 18 பேர் காயமடைந்தனர். இந்த ஏவுகணை இஸ்ரேலில் உள்ள அரபு அல்-அரம்ஷியில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து தாக்கியதாக ஹிஸ்புல்லா கூறுகிறது.

 

Tags :

Share via