தமிழ்நாட்டில் பாரத் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

by Staff / 18-04-2024 11:45:55am
தமிழ்நாட்டில் பாரத் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர், திருவள்ளூர், கோவை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பாரத் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்வதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via