வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் பலி

by Staff / 19-04-2024 12:21:29pm
வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் பலி

மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி(65) தனது மனைவியுடன் சேலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வாக்களிக்க சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல கெங்கவல்லி செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு வாக்களிக்க சென்ற சின்ன பொண்ணு(77) என்ற மூதாட்டியும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

Tags :

Share via