2 வாக்காளர்கள் உயிரிழப்பு குறித்து சத்யபிரதா சாகு பேட்டி

by Staff / 19-04-2024 02:06:46pm
2 வாக்காளர்கள் உயிரிழப்பு குறித்து சத்யபிரதா சாகு பேட்டி

தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சேலத்தில் வாக்களிக்க வந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'அதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பந்தல், வாக்காளர்கள் அமர்ந்து செல்வதற்கான இருக்கைக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via