மனைவி அடிப்பதாக கூறி விவாகரத்து கேட்ட கணவன்
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இந்நிலையில், அவரை மீட்ட சுற்றியிருந்தவர்கள் எதற்கு இந்த முடிவு என்று கேட்க ,அதற்கு,, எனது மனைவி தினமும் என்னை அடித்து சித்தரவதை செய்கிறாள் . என்னால் வலி தாங்க முடியவில்லை. பெற்ற குழந்தைகளை பார்க்க அனுமதிக்காமல், நான் இறந்துவிட்டதாக அவர்களிடம் கூறியிருக்கிறாள். எனவே எனக்கு விவாகரத்து வாங்கிக்கொடுங்கள் என அழுது புலம்பியிருக்கிறார்.
Tags :