திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே மோதல்

by Staff / 26-04-2024 12:57:19pm
திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே மோதல்

நாடு முழுவதும் மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை அடுத்து மேற்குவங்க மாநிலம் பலூர்காட் மற்றும் ராய்கஞ்ச் ஆகிய பகுதிகளில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே இடையே மோதல் ஏற்பட்டது. பெண்களை வாக்களிக்க விடாமல் மத்திய படைகள் தடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பாஜக மாநிலத் தலைவர் சுகந்த் மஜூம்தாருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச் சாவடி முன்பு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via