மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

by Staff / 25-01-2024 04:57:26pm
மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

திண்டுக்கல் பழைய கரூர் சாலை எம் வி எம் நகரை சேர்ந்தவர் காமாட்சி மகன் ரமேஷ் குமார் வயது 37 வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவரது மனைவி நந்தினி இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது இவர்களுக்கு ஆறு வயதில் மகனும் மூன்று வயதில் மகளும் உள்ளனர். ரமேஷ் குமார் வெல்டிங் பட்டறையில் கடினமாக வேலை பார்த்ததால் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டது. மேலும் மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மது அருந்தி வீட்டிற்கு வந்த ரமேஷ் குமாரை அவரது மனைவி நந்தினி கண்டித்துள்ளார். இதனால் விரத்தி அடைந்து தூக்கு ‘போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via