தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை   அதிகாரிகள் தகவல் 

by Editor / 25-12-2021 09:27:16am
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை   அதிகாரிகள் தகவல் 

 

ஓமைக்கிரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் பரிந்துரைகள்.

* ஓமைக்கிரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒப்பந்த பணியாளர்களின் பணி காலம் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், தொற்று அதிகரித்தால் பணியாளர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு மேலும் நீட்டிப்பு செய்ய பரிந்துரை.

* இரவு நேர ஊரடங்கால் பயணில்லை..எனவே, பொது இடங்களான வணிக வளாகங்கள், கூட்டம் கூடும் இடங்களில் முககவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கடுமையாக்கவும், அபராதம் வசூலிக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை செய்ய வலியுறுத்தல்.

* ஓமைக்கிராம் தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், தொற்று 10% அளவில் நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டம்

* விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிப்படுத்துவது குறித்த வழிக்காட்டுதல்கள் முறைப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்..

* ஓமைக்கிரான் தொற்று வேகமாக இருக்கும் நிலையில், இறப்பு விகிதம் குறைவாக இருப்பினும், தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்கள் மீண்டும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

 

Tags :

Share via