ஒரு பேரிச்சம்பழம் தான் உணவு.. சகோதரர்கள் பலி
கர்நாடகாவில் வசித்துவந்த முகமது ஜுபர் கான் (29) மற்றும் ஆஃபான் கான் (27). இவர்களின் தாய் ருக்ஸானா கான் மற்றும் தந்தை நசீர் கான். கோவாவின் மார்கோவா நகரத்திற்கு குடியேறியுள்ளனர். இதில் முகமது ஜுபர் கான் மனைவி மற்றும் குழந்தைகள் இவர்களுடன் வரவில்லை. இந்நிலையில், மனைவி மற்றும் மகன்களின் வித்தியாசமான உணவு பழக்கத்தை கண்டு அஞ்சி தனியே வீடு எடுத்து தங்கியுள்ளார் நசீர் கான். திடீரென ஒரு நாள் சகோதரர்கள் இருவரும் வீட்டில் உயிரிழந்தது கிடந்துள்ளனர். அவர்களின் தாய் மயக்கமடைந்து கிடந்துள்ளார். இதுகுறித்த போலீசார் விசாரணையில் ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்த இவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
Tags :