கெஜ்ரிவாலின் மனு இன்று மீண்டும் விசாரணை.

by Editor / 30-04-2024 11:11:30am
கெஜ்ரிவாலின் மனு   இன்று மீண்டும் விசாரணை.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தன்னை கைது செய்து காவலில் வைத்திருப்பதை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கில்  கெஜ்ரிவாலை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் அதனால் தான் ஜாமீன் மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றும் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை 30ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 

Tags : கெஜ்ரிவாலின் மனு இன்று மீண்டும் விசாரணை.

Share via