தூத்துக்குடியில் உப்பளத் தொழிலதிபரை தாக்கி கொலை மிரட்டல்-2 பெண்கள்  கைது 

by Editor / 09-08-2021 07:57:11pm
தூத்துக்குடியில் உப்பளத் தொழிலதிபரை தாக்கி கொலை மிரட்டல்-2 பெண்கள்  கைது 

 

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலதிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 4பேரை தேடி வருகின்றனர். 


தூத்துக்குடி டேவிஸ்புரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தனபாலன்75 வயது,. உப்பள அதிபர், இவருக்கு தூத்துக்குடி அய்யனார்புரத்தில் சொந்தமான 5 கடைகள் உள்ளன. அதில் ஒரு கடையில் ஜெயராமன் என்பவர் வாடகைக்கு இருந்து வருகிறார். அவர் சரிவர வாடகை கொடுக்கவில்லையாம். இதையடுத்து தனபாலன் வாடகை கேட்டபோது, கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். 


இது குறித்து தனபாலன் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி தனபாலன் உப்பளத்திற்கு தனது மருமகனுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது 5பேர் அவரது காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும், தனபாலன் மற்றும் அவரது மருமகன் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மேலும் கார் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது.

இதுகுறித்து புகாரின் பேரில் போலீஸ் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிந்து, கீழ அரசரடி அய்யனார்புரம் ஜெயராமன் மனைவி பிராட்டி (34), முனியசாமி மனைவி ஆனந்தம்மாள் (48), ஆகிய 2பேரை கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக செபஸ்தியான் மகன் ஜெயராமன் (46) என்பவர் உட்பட 4பேர் மீது வழக்குப் பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via