மதுரையில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு

by Admin / 10-08-2021 04:52:29pm
மதுரையில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு

 

மதுரையில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சாமநத்தம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகள் காவியா (வயது 14). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பெற்றோர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
 
அங்கிருந்து காவியா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே காவியா பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு சம்பவம்...

நாகமலை புதுக்கோட்டை அரவிந்தர் தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் அபிஷேக் (வயது 19). இவருக்கு மனநல பாதிப்பு இருந்தது. இதற்காக அவர் இளமனூரில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அபிஷேக் படுக்கையில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிஷேக் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via