உச்சநீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த பெண்... எம்.பி. மீது பாலியல் புகாரளித்தவரா..?

by Admin / 25-08-2021 12:26:50pm
உச்சநீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த பெண்... எம்.பி. மீது பாலியல் புகாரளித்தவரா..?

உச்சநீதிமன்ற வளாகத்தில், தனக்கு தானே தீவைத்துக்கொண்ட பெண், பகுஜன் சமாஜ் எம்பியால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர் என தெரியவந்துள்ளது.
 
கடந்த 16ம் தேதி, உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் திடுதிப்பென நுழைந்த இளம்பெண் மற்றும் அவரது ஆண் நண்பர், திடீரென உடலில் தீவைத்துக்கொண்டனர்.

 இதில் அந்த ஆண் அன்றைய தினமே உயிரிழந்தார். உயிருக்கு போராடிய இளம்பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் அந்த பெண் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த 2019ம் ஆண்டு பகுஜன் சமாஜ் எம்.பி அதுல் ராய் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடுத்தவர் எனவும் கூறப்படுகிறது.
 
இதுதொடர்பாக அதுல் ராய் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அவரது உறவினர்கள் இளம்பெண் மீது மோசடி வழக்கு பதிந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பெண், இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டு, பின்னர் உச்சநீதிமன்றம் வளாகத்தில் ஆண் நண்பருடன் தீக்குளித்துள்ளார்.

 

Tags :

Share via