சகோதரியை காதலிப்பதாக சந்தேகமடைந்து இளைஞனை கொன்ற சிறுவன்

by Staff / 17-09-2022 04:18:02pm
சகோதரியை காதலிப்பதாக சந்தேகமடைந்து இளைஞனை கொன்ற சிறுவன்

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் பாபாவார் கிராமத்தில் தனது சகோதரியை 21 வயதான இளைஞன் காதலிப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து 16 வயது சிறுவன் அந்த இளைஞனை கொலை செய்துள்ளான். கொலை செய்யப்பட்ட இளைஞனின் சிதைந்த உடல் பாகங்கள் 8 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்தனர். கைது செய்யபட்ட சிறுவன் கோடா மாவட்ட சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பின்னர், இந்த வழக்கு தொடபான விசாரணை கோடா மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது 19 வயதான கொலையாளிக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், கொலையாளிக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via