அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து!: 2 பேர் பலி

by Editor / 14-09-2021 10:36:32am
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து!: 2 பேர் பலி

தருமபுரி அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து 4 லாரிகள் மோதிய விபத்தில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் தொப்பூரில் செப்டிக் கிளீனிங் லாரி ஒன்று பழுதாகிய நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக கருக்கல் பாரம் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. அடுத்தடுத்து வந்த மேலும் 3 லாரிகளும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையில் இருந்த லாரிகளும் அகற்றப்பட்டன. 4 லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட இந்த கோர விபத்தில் சிக்கி 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 10 பேர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Tags :

Share via