தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 5 கோடியை எட்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

by Editor / 26-09-2021 03:20:51pm
தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 5 கோடியை எட்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 5 கோடியை எட்டும் என்றார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

தஞ்சாவூர் அருகே மொன்னையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

தமிழ்நாட்டில் இதுவரை 4.43 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 5 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாரந்தோறும் மத்திய அரசிடம் இருந்து 50 லட்சம் தடுப்பூசிகள் அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறு அடுத்த வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் வரப் பெற்றால் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மாபெரும் முகாம் நடத்தப்படும்.

 

Tags :

Share via