தில்லி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு; இருவர் கைது

by Editor / 26-09-2021 03:22:02pm
தில்லி நீதிமன்ற துப்பாக்கிச்சூடு; இருவர் கைது

பிரபல ரௌடி ஜிதேந்தா் மான் மற்றும் ஆயுதம் ஏந்திய எதிர் கோஷ்டியைச் சோந்த இருவா் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக தில்லி காவல்துறை சிறப்பு பிரிவு இருவரை கைது செய்துள்ளது.

உமாங், வினய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வடமேற்கு தில்லி ஹைதர்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. துப்பாக்குச் சூடு நடைபெற்ற ரோஹிணி நீதிமன்றத்தின் நான்காவது வாயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு சாரர் கூறுகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று, வழக்கறிஞர் போல் உடை அணிந்து வந்த உமாங் உள்பட மூவர், நீதிமன்றததின் 9ஆவது செக்டரில் உள்ள அறைக்கு சென்றதாகவும் இவை அனைத்தும் திட்டமிட்டப்படி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்குச்சூட்டு பிறகு, வெளியில் நின்று கொண்டிருந்த காரில் தப்பித்து செல்ல அவர்கள் திட்டமிட்டுருந்தனர். ஆனால், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இரவர் கொல்லப்பட்ட உமாங் மட்டும் தப்பித்து சென்றுள்ளார்.

 

Tags :

Share via