போராடியவர்கள் மீது  868 வழக்குகள்  ரத்து

by Editor / 27-09-2021 03:06:30pm
போராடியவர்கள் மீது  868 வழக்குகள்  ரத்து



நீட் தேர்வு, மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 868 வழக்குகளை ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், "அறவழியில் போராட்டம் செய்த மக்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடிய 446 பேர், மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய 422 பேர் என மொத்தம் 868 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்குகளின் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, அறவழியில் போராடிய 5,570 பேர் மீது தொடரப்பட்டிருந்த வழக்குகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via