குழந்தையை கொடூரமாக கொன்ற தலிபான்கள்

by Editor / 28-09-2021 11:45:09am
 குழந்தையை கொடூரமாக கொன்ற தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து அந்நாடு மிக மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. தலிபான்களுக்கு பயந்து மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.. அதற்கேற்றார் போலவே தலிபான்கள் குடிமக்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.. முந்தைய ஆட்சியை போல கடுமையான விதிகள் இருக்காது, பென்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று தாலிபான்கள் இந்த முறை உறுதியளித்திருந்தாலும், அதற்கு நேர்மாறாகவே செயல்பட்டு வருகின்றனர்..

அந்த வகையில், கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரியை கணவர் குழந்தை முன்பு கொடூரமாக கொன்றது, கடத்தல்காரர்கள் என்று கூறப்படும் 4 பேரை கொன்று அவர்களின் சடலங்களை பொதுவெளியில் தொங்கவிட்டது என பல்வேறு அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை தலிபான்கள் அரங்கேற்றினர்.

இந்நிலையில் தலிபான்களின் மற்றொரு கொடூர நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஒரு குழந்தையை கொடூரமாக கொன்றதாக அந்நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அங்குள்ள தாகர் மாகாணத்தில் இந்த கொடூரம் அரங்கேறியதாகவும், தலிபான்களுக்கு அவரது தந்தை எதிர்ப்பு காட்டியதால், அவரின் குழந்தையை தூக்கிலிட்டனர் என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் பல கொடூரங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த கொலை நிகழ்ந்துள்ளது. தலிபான்கள் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர்களுக்கு பல மரணதண்டனைகளை நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

முன்னதாக நேற்று ஹெல்மண்ட் மாகாணத்தில் சிகையலங்கார நிபுணர்கள் தாடியை ஷேவ் செய்யவும் அல்லது முடி வெட்டுவதற்கும் தலிபான்கள் தடை விதித்தனர்.. மேலும் அழகு நிலையங்களின் வளாகத்தில் இசை அல்லது பாடல்களை இசைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது..

 

Tags :

Share via