ஜாமீனில் வந்த விவசாயி தற்கொலை

by Staff / 19-10-2023 01:00:01pm
ஜாமீனில் வந்த விவசாயி தற்கொலை

சேலம் மாவட்டம், வீரகனூர் பேரூராட்சி ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் ராஜேஷ்(38).
விவசாயியான இவரது மனைவி மாதேஸ்வரி(32). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ராஜேஷ் கடந்த ஆண்டு வேலைக்காக சிங்கப்பூர் சென்றார். போலி பாஸ்போர்ட் மூலம் அவர் வேலைக்கு சென்றது
கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக சேலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, சொந்த ஊருக்கு வந்த ராஜேஷை கைது செய்து சிறையிலடைத்தனர். பின்னர், நிபந்தனை ஜாமீனில் வந்த ராஜேஷ் கையெழுத்து போட்டு வந்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் தனது விவசாய தோட்டத்திற்குசென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால்,மனைவி தேடிச் சென்ற போது அவரது தோட்டத்தில் உள்ள மரத்தில் ராஜேஷ் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
அக்கம் - பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டபோது, உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், வீரகனூர் போலீஸ் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார், ராஜேஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via