நெல்லையில் மீண்டும் கொலை?  தண்டவாளத்தில் சடலம் கிடந்ததால் பதற்றம் 

by Editor / 28-09-2021 05:17:18pm
நெல்லையில் மீண்டும் கொலை?  தண்டவாளத்தில் சடலம் கிடந்ததால் பதற்றம் 

 

நெல்லையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடர் கொலைகள் நடைபெற்றன. இந்நிலையில் மீண்டும் ரயில்வே கேட் தண்டவாளத்தில் சடலம் கிடந்ததால் துணை ஆணையர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
திருநெல்வேலி: குறுக்குத்துறை ரயில்வே கேட் தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடல் சிதறிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைப் பார்த்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் நெல்லை காவல், ரயில்வே துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். நெல்லையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடர் கொலைகள் நடைபெற்றன. 


இதன் காரணமாக மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.இதையடுத்து காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


.முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் நெல்லை தொடர் கொலை சம்பவத்தின் தொடர்ச்சி இல்லை. உயிரிழந்த நபர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜோன் சான் நாக் (50). நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியில் வேலை செய்வதற்காக நெல்லை வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து அவர் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா போன்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via