சொத்துரிமை வழங்கும் திட்டம் - பயனாளிகளுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி

by Admin / 07-10-2021 12:01:11am
சொத்துரிமை வழங்கும் திட்டம் - பயனாளிகளுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி

மத்திய பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாடுகிறார்.

கிராமப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு சொத்துரிமை வழங்கும் நோக்கில் பிரதமர் மோடி  இத்திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார். இந்த கிராமப்புற மேம்பாட்டு திட்டமானது சுமார் 9 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்திலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அத்திட்ட பயனாளர்களுடன் மோடி உரையாடுகிறார்.

 அப்போது சுமார் ஒன்று புள்ளி 7 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு மின்னணு சொத்து அட்டைகளையும் வழங்குகிறார்.

இத்திட்டம் மூலம் சொத்துக்களை சரியாக சர்வே செய்வதுடன், அதன் மூலம்  கடன் பெறவும், சொத்து வரியை முறையாக கணக்கிடவும் உதவும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via