துரைமுருகனை கௌரவப்படுத்திய உதயநிதி

by Staff / 28-01-2024 05:36:12pm
துரைமுருகனை கௌரவப்படுத்திய உதயநிதி

பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினமான பிப்ரவரி 3ஆம் தேதி அன்று திமுக சார்பில் அமைதி பேரணி நடத்தப்படுகிறது. தமிழக முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதால், இந்த அமைதி பேரணிக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னடக்கத்துடன் சீனியர் நிர்வாகியான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை தலைமை தாங்க வைத்து கௌரவித்துள்ளார். இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.

 

Tags :

Share via