சென்னை ஐகோர்ட் நீதிபதியாக  பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய் பொறுப்பேற்பு 

by Editor / 09-10-2021 04:11:07pm
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக  பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய் பொறுப்பேற்பு 

குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மூத்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஐகோர்ட் நீதிபதிகளை இடமாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் குஜராத் ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணி புரிந்து வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய், சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.


அவருக்கு சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

 

Tags :

Share via