நள்ளிரவில்  குடிசைக்குள் லாரி புகுந்தது;   அண்ணன், தம்பி, தங்கை பலி

by Editor / 09-10-2021 04:13:51pm
நள்ளிரவில்  குடிசைக்குள் லாரி புகுந்தது;   அண்ணன், தம்பி, தங்கை பலி

சாலையோரம் இருந்த குடிசைக்குள் லாரி புகுந்து. இதில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்தனர். இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.


நெஞ்சை பிளக்கும் விபத்து, மத்திய பிரதேசத்தின் டோமோக் மாவட்டத்தில் உள்ள பத்யாஹர்-ஹட்டா சாலையில் வெள்ளி  இரவு 11 மணியளவில் நடந்தது. அஜனி தபரியா என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தது.


அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த குடிசைக்குள் புகுந்தது. இதில், குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் (அண்ணன்,தம்பி, தங்கை) மற்றும் லாரியில் பயணித்த ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஆகாஷ் மகிர்வார் (18) அவரது சகோதரி மனீஷா (16) அவரின் சகோதரன் ஓம்கர் (14) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள்.


உடல்நலக்குறைவால் இவர்களின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு உதவியாக தாய் மருத்துவமனையில் தங்கியுள்ளார். இருவரும் வீட்டில் இல்லாததால் பிழைத்தனர்.

 

Tags :

Share via