5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் மாநகர போலீஸ் கமிஷனராகவும் பதவி வகிப்பார்.
முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோரும் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், சங்கர், வெங்கட்ராமன், அமரேஷ்பூஜாரி, வினித் தேவ் வாங்கடே, மகேஸ்குமார் அகர்வால், கபில்குமார் சாரட்கர் ஆகிய ஆறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags :