15 அடி உயரமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய கோழிப்பண்ணை அதிபர்...

by Editor / 29-10-2021 03:12:08pm
15 அடி உயரமுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய கோழிப்பண்ணை அதிபர்...

பல்லடம் அருகே கோழிப்பண்ணை அதிபர்  மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம்  நந்திபுலம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்சன் 52. இவருக்கு சுனி 48 என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கணவன் ஜாய்சனுக்கும்  மனைவி சுனிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில  வருடங்களாக கணவனும்  மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜாய்சன்  திருப்பூர் மாவட்டம் பல்லடம் கல்லம்பாளையத்தை சேர்ந்த  சண்முகம் என்பவருக்கு சொந்தமான பொங்கலூர் கல்லாம்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையை குத்தகைக்கு  எடுத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை கோழி பண்ணை வளாகத்தில் உள்ள 15 அடி உயரம் உள்ள வேப்பம் மரம் ஒன்றில் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர்  இது குறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதையடுத்து சம்பவயிடம் விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஜாய்சனின் இந்த முடிவுக்கு கடன் தொல்லை மற்றும் குடும்ப தகராறு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


 

 

Tags :

Share via