வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து - மதுரை உயர் நீதிமன்றக் கிளை
வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
சாதிரீதியாகக் கணக்கெடுப்பு நடத்தப்படாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், தற்போது மதுரைக் கிளை உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது.
Tags :