சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு ஆயுள்தண்டனை

by Editor / 15-11-2021 05:23:23pm
 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு  ஆயுள்தண்டனை

விராலிமலையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மாதவன் என்பவருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மாதவன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி மாதவனுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசின் தரப்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

Tags :

Share via