10 வயது சிறுமி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
புதுச்சேரி லாஸ்பேட்டை நரி குரவர் காலனியில் வசித்து வருபவர் பாபு – ரேகா தம்பதியினர், இவர்களுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர், இவர்களது இரண்டாவது மகள் ரித்திகா. 10 வயதான இவர் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி லாஸ்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்த போது பெற்றோரிடம் கேட்காமல் வீட்டில் இருந்து பணம் எடுத்து கொண்டு தின்பண்டம் வாங்கி உள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதில் மனம் உடைந்த ரித்திகா தனது வீட்டில் அருகே இருந்த மரத்தில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இது குறித்து மாணவியின் தாயார் ரேகா லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 வயது சிறுமி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது
Tags :