மழையால் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு.
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவருவதால் இதன் தாக்கம் கடலூர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. திட்டக்குடி அடுத்த புலிவலம் கிராமத்திலுள்ள தரைப்பாலம் ஓடை வெள்ளத்தில் மூழ்கியதால் திட்டக்குடி ஆவட்டி செல்லும் சாலை துண்டிப்பு போக்குவரத்து நிறுத்தம். பத்துக்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்,இன்றைய வேலைவாய்ப்பு பறிபோயுள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Tags :