காதல் திருமணம் செய்த மகளையும் அவரது கணவனையும் வெட்டிக்கொன்ற தந்தை
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகிலுள்ள வீரப்பட்டி ஆர்.சி தெரு சேவியர் காலணியை சேர்ந்தவர் முத்துக்குட்டியின் இவரது மகள் ரேஸ்மா பி.எஸ்.சி 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அவரது உறவினர் வடிவேலுவின் மகன் மாணிக்கராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு முத்துக்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தன் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 1 மாதத்திற்கு முன் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர், 2 தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊருக்கு வந்தபோது, இவர்கள் திருமணத்திற்கு முத்துக்குட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று ரேஷ்மா மற்றும் அவரது கணவர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த முத்துக்குட்டி இருவரையும் அரிவாளால் சராமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இருவரது உடல்களை மீட்ட போலீசார், பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக எட்டையாபுரம்போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags : A father who killed his love-married daughter and her husband