மீண்டும் தொடங்குகிறது சர்வதேச விமான போக்குவரத்து.
மீண்டும் தொடங்குகிறது சர்வதேச விமான போக்குவரத்து
கடந்த ஆண்டு உலகஅளவில் பரவிய கொரோனா காரணமாக மத்திய அரசு சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதித்திருந்தது.
வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வர்த்தக விமான சேவை டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. வெளிநாடுகளில் சிக்கியவர்களை இலவசமாக ஏர் இந்தியா விமானம் மூலம் இந்திய அரசு மீட்டது.
பல்வேறு நாடுகள் விமானங்களை இயக்க இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. பல்வேறு நாடுகளுக்கு இந்தியா இரு நாடுகளுக்கு இடையில் விமானங்களை இயக்கி வருகிறது.
வர்த்தக விமான சேவை டிசம்பர் 15-ந்தேதியில்ந்து மீண்டும் தொடங்கப்படும் என இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags :