ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

by Editor / 29-11-2021 08:38:35pm
ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  அதிரடி சோதனை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் நெல்லையிலிருந்து 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட தணிக்கை குழு துணை  இயக்குனர் உமாசங்கர் மற்றும் உள்ளாட்சி துறை தணிக்கை குழு இயக்குனர் முகமது லெப்பை உள்ளிட்டோர் தலைமையில் இன்று ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி களுக்கான தணிக்கை செய்யும் பணி நடைபெற்ற நிலையில்  நெல்லை டிஎஸ்பி எஸ்கால் உத்தரவின் பெயரில் லஞ்ச ஒழிப்பு துணை ஆய்வாளர்கள்  ராபின்சன் ஞானசிங், அனிதா தலைமையிலான  லஞ்ச ஒழிப்பு துறையினர்  வந்து தற்போது சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via