வருமானத்திற்கு அதிகாமாக 4.85 கோடி சொத்து சேர்ந்தது எப்படி முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை

by Editor / 15-12-2021 08:14:37am
வருமானத்திற்கு அதிகாமாக 4.85 கோடி சொத்து சேர்ந்தது எப்படி முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான ஆந்திராவில் 2இடங்கள் ,கர்நாடகாவில் 1 இடமென  69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் அவருடைய மகன் மற்றும் மனைவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2016ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அவர் தன்னிடம் 1கோடி ரூபாய் அளிவில் சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தார். 2020ம் ஆண்டு 4.85 கோடி வரை வருமானத்திற்கு அதிகமாக தங்கமணி,அவரது மனைவி சாந்தி,மகன் தரணிதரன் சொத்து சேர்த்திருப்பதாக நாமக்கல் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எந்த தொழிலும் செய்யாத அவரது மனைவி சாந்தி எப்படி வருமான வரை காட்டினார் என்றும் விசாரணை.
முருகன் எர்த்ஸ் நிறுவனத்தில் தங்கமணியும், அவரது மகனும் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 2016-2020ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது மட்டுமல்லாமல், முறைகேடாக சேர்த்த சொத்துக்களை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கமணி எந்தெந்த நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார் என்ற தகவலும் முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையில் சிக்கியுள்ள 5வது அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via