திருப்பூர் தனியார் பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்.

by Editor / 18-12-2021 01:06:09am
திருப்பூர் தனியார் பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்  500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்.

திருப்பூர் பூலுவப்பட்டி அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வரும் 4 வயது சிறுமிக்கு கடந்த 14ம் தேதி அன்று அதே பள்ளியில் பணியாற்றும் நபரால் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று குழந்தையை குளிப்பாட்டும் போது வலிப்பதாக தாயிடம் குழந்தை கூறி உள்ளது. விசாரிக்கையில் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து குழந்தை கூறியதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் அணுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 17ஆம் தேதி  இந்த வழக்கு  திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. குழந்தையை அரசு மருத்துவனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் இது தொடர்பாக  பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பள்ளியில் இருந்த 110 சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசார் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதாகவும், உடனடியாக குற்றம் செய்த நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழந்தையின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பூலுவப்பட்டி பிரிவில் சாலை மறியலில்  ஈடுபட்டுள்ளனர். சுமார் 5மணி நேர்த்திற்கும் மேலாக போராட்டம் நீடிப்பதால் சில கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் தனியார் பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்  500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்.
 

Tags :

Share via