வீட்டை எதிர்த்து பதிவு திருமணம் மணமகனின் மீது கொலைவெறி தாக்குதல்

by Admin / 25-12-2021 04:49:00pm
  வீட்டை எதிர்த்து பதிவு திருமணம் மணமகனின் மீது கொலைவெறி தாக்குதல்

புதுடெல்லியின் சாகர்பூர் பகுதியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 22 வயது இளைஞரும், பெண்ணும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு பதிவுத் திருமணம் நடந்துள்ளது. இதற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரஜவ்ரி பூங்கா காவல் நிலையத்தில், திருமணம் தொடர்பான தகவல்களை அளிக்க தம்பதிகள் சென்றுள்ளனர். அவர்களுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த மணமகளின் உறவினர்கள், மணமகன் வெளியே வந்தபோது, அவரைத் தூக்கிச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பெண் வீட்டார் தந்தை, சகோதரர், மாமா உள்ளிட்டோர் நடத்திய தாக்குதலில், மணமகனின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில், மணமகனின் ஆணுறுப்பை மணமகளின் குடும்பத்தினர் காயப்படுத்தியுள்ளனர். தற்போது மணமகன் டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ரஜவ்ரி பூங்கா காவல்துறையினர் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 

Tags :

Share via