35ஆவது கட்ட விசாரணை 2வது நாளாக நடந்து வருகிறது.

by Editor / 25-01-2022 01:20:08pm
35ஆவது கட்ட விசாரணை 2வது நாளாக நடந்து வருகிறது.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையம் விசாரணை 35ஆவது கட்ட விசாரணை நேற்று துவங்கியது.இதில் சென்னை காவலர் நலன் ஏடிஜிபி சைலேஷ் குமார் யாதவ் இன்று நேரில் ஆஜர் ஆனார்.இந்த இவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தென் மண்டல காவல் துறை தலைவராக பொறுப்பில் இருந்தவர் சைலேஷ் குமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் தலைமை செயலாளர்  கிரிஜா வைத்தியநாதனுக்கு  சம்மன் அனுப்பட்டுள்ளது ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் அவர் ஆஜாராக வில்லை  கூறப்படுகிறது.இதன்தொடர்ச்சியாக  அடுத்த கட்ட விசாரணையில் அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என ஒரு நபர் விசாரணை ஆணையம் தகவல்.

 

Tags : The 35th phase investigation has been going on for 2 days.

Share via