பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை

by Admin / 28-01-2022 11:35:33am
 பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை

பஞ்சாப் மாநிலத்தையொட்டிய பாகிஸ்தான்  எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இன்று அதிகாலை  குர்தாஸ்பூரில் உள்ள சந்து வாடாலா பகுதியில் பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஒரு பி.எஸ்.எப்.வீரர் காயமடைந்தார். 

பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றனர். அந்த பகுதியில் இருந்து ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 47 மஞ்சள் பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகள், ஓபியம் என சந்தேகிக்கப்படும் 7 பாக்கெட்டுகள், 44 ரவுண்டு துப்பாக்கி குண்டுகள், 1 சீன துப்பாக்கி  ஒரு பெரெட்ட்டா பிஸ்டல், உள்ளிட்டவற்றை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். 


 
 

 

Tags :

Share via