அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர் ஜானகிராமன்.தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களிடம் தனக்கு வாக்களிக்கவேண்டுமென தீவிரமாக தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் இன்று அதிகாலை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரதான கட்சியை சேர்ந்த ஒருவேட்பாளர் தற்கொலை செய்து கொண்டது அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஜானகிராமன் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, அதிமுகவினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்றைய தினம் ஜானகிராமனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags : AIADMK candidate Janagraman commits suicide by hanging