இரண்டு ஆண் குழந்தைகளோடு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை.

by Editor / 14-02-2022 01:34:43pm
இரண்டு ஆண் குழந்தைகளோடு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே .மோரூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி மரகதம் (வயது 30) இவருக்கும் கணவனுக்கும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.இதன்காரணமாக குழந்தைகள் செல்வகணபதி (வயது 7) மற்றும் கோகுலக்கண்ணன் (வயது 5) ஆகிய இரண்டு ஆண்குழந்தைகளை அழைத்துக்கொண்டு அந்தபகுதியிலுள்ள கிணற்றில் தள்ளி பின்னர் மரகதமும் கிணற்றில் தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இருந்து மூன்று பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags : Female suicide by jumping into well with two male children.

Share via