எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியை கை விடுக-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 15-02-2022 12:00:03am
எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியை கை விடுக-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


எல்.ஐ.சி.நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவு செய்து,அவர்களின்
நன்னம்பிக்கையைச்சம்பாதித்து தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச்சமூகப்பாதுகாப்பை
வழங்கியுள்ளது.அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு
வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார் மயத்தை நோக்கிய-முற்றிலும் விரும்பதாகத செயலாகும்.

இம்முடிவு மக்களின் நலனையோ LIC நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று
என்பது வெள்ளிடை மலை.ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களைக்கட்டியமைக்க வேண்டுமேயன்றி தொடர்
விற்பனையில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டக்கூடாது.முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட இம்முடிவை
ஒன்றிய அரசு திரும்ப பெற்று எல்.ஐ.சி நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


 



 

 

Tags :

Share via