திருமணம் செய்ய மறுத்த காதலியை, காதலன் கத்தியால் குத்திய சம்பவம்

by Admin / 15-02-2022 05:10:29pm
திருமணம் செய்ய  மறுத்த  காதலியை, காதலன் கத்தியால் குத்திய சம்பவம்

கர்நாடகா மாநிலம் தொட்டபல்லாபுர பகுதியை சேர்ந்தவர் கிரிஷ், இவர் அரசு மருத்துவமனையில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிந்து வருகின்றார். 

அதே மருத்துவமனையில் பிரபாவதி என்பவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் காதலன் கிரிஷ், காதலி பிரபாவதியை திருமணம் செய்ய பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டதாக சொல்லப்படுகிறது .

இருவரின் காதலுக்கு பிரபாவதி பெற்றோர்கள் மற்றும் கிரிஷ் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் பிரபாவதி மட்டும் கிரிஷ் உடன் திருமணம் செய்ய மறுத்ததாக சொல்லப்படுகிறது 

திருமணம் செய்ய மறுத்ததால் கடுப்பான காதலன் கிரிஷ், காதலி பிரபாவதியின் வீட்டிற்கு சென்று  திருமணம் மறுப்பு குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளத.
 
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற காதலன் கிரிஷ், தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாவதியை சரமாரியாக குத்திவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

படுகாயமடைந்த காதலியை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், காதலனிடன் விசாரித்து வருகின்றனர்.

 

 

Tags :

Share via