ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்
ரஷ்யா-உக்ரைன் போர் 8 ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி மீண்டும் தொலைபேசி மூலம் நேற்று பேசினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் தற்போதைய நிலவரம் மற்றும் சண்டை நடைபெறும் பகுதிகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ரஷ்ய அதிபரிடம் விவாதித்தார்.
குறிப்பாக கார்கிவ் நகரில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப ரஷ்ய ராணுவம் உதவ வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
Tags :