3 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

by Staff / 24-03-2022 05:36:30pm
 3 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் உள்ள தானிய வியாபாரிகள் சங்க எடை மேடை செயல்பட்டு வருகிறது. இந்த எடைமேடையின் பின்புறம் உத்திரப்பிரதேச மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

அந்த லாரியின் ஓட்டுனர் மற்றும் கிளீனர் இல்லாததால், சந்தேகமடைந்த வியாபாரிகள் லாரியில் ஏறி பார்த்த போது, அதில் 3 டன் எடை கொண்ட 64 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
 
இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் லாரி மற்றும் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
 

 

Tags :

Share via