வழக்கறிஞர் மோகனுக்கு பாராட்டு விழா

by Staff / 24-03-2022 05:43:03pm
 வழக்கறிஞர் மோகனுக்கு பாராட்டு விழா

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு தண்டனை வாங்கி தந்த வழக்கறிஞர் மோகனுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.
 
ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்கறிஞர் மோகனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது கோகுல்ராஜின் தாயார் முகத்தில் இருந்த புன்னகைக்கு ஈடு எதுவும் கிடையாது என கூறினார். இந்நிகழ்வில் சாதி ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

 

Tags :

Share via